
தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா கூறியதாவது, கேப்டன் விஜயகாந்த் அவர்கள் திரையுலகத்திலும் அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல. பலரது அன்பையும் மரியாதையும் பெற்ற மனிதர்.
கேப்டனுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இருக்கும் உறவு அரசியலை தாண்டிய ஒன்று. பிரதமர் கேப்டனை தமிழகத்தின் சிங்கம் என்ற அன்போடு அழைப்பார். ஒரு சகோதரரை போல கேப்டனை அடிக்கடி தொடர்பு கொண்டு உடல் நலக் குறைபாடுகள் குறித்து கவலைப்பட்டு கேட்பார்.
Captain Vijayakanth was not just a towering figure in Tamil cinema and politics, but a man who earned the love and respect of many, including our Prime Minister. Narendra Modi ji always saw him as more than a political colleague. He would fondly call him the ‘Lion of Tamil Nadu’… pic.twitter.com/yL12rjgAkQ
— Premallatha Vijayakant (@PremallathaDmdk) April 14, 2025
அவர்களது நட்பு பரஸ்பர மரியாதையிலும் அன்பிலும் கட்டப்பட்ட மிகவும் அரிதான ஒன்று என கூறியுள்ளார். அதிமுக பாஜக கூட்டணி உருவாகியுள்ள நிலையில் தற்போது பிரதமர் மோடியை தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் புகழ்ந்து பேசியது பற்றி அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.