சமூக ஊடகங்களில் தற்போது பரபரப்பாக பரவி வரும் ஒரு வீடியோ, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடற்கரையில் தனது குழந்தையுடன் சென்ற ஒரு தாய், ரீல்ஸ் வீடியோ எடுத்தபோது கடலின் பேரலைகள் சிறுமியை இழுத்துச் சென்றுள்ளன. இந்த வீடியோவில், சிறுமி கடலலைகளில் மகிழ்ச்சியுடன் விளையாடிக்கொண்டிருப்பதும், தாய் வீடியோ எடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் தெரிகிறது. கடல் அலைகள் பெரிதாக வந்த நேரத்திலும் தாய் வீடியோ எடுப்பதில் ஆர்வம் காட்டி  கவனக்குறைவுடன் நடந்து கொண்டது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கடலின் வலுவான அலைகள் அந்த சிறுமியை திடீரென இழுத்துச் சென்றதால், அருகிலிருந்த மக்கள் அலறியடித்துள்ளனர். இந்த வீடியோவைக் பகிர்ந்த சமூக ஊடக பயனர் டாக்டர் ஷீத்தல் யாதவ், “நீங்கள் எடுத்தது ரீல் அல்ல, ஒரு மரண காட்சி” எனக் கூறியுள்ளார். இதுவரை 3.7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ள இந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில், “சிறுமி உயிருடன் இருக்கிறாளா?” என்ற கேள்விக்கு, “இல்லை, அவள் உயிரிழந்துவிட்டாள்” என்ற பதில் வந்துள்ளது.

 

இதனால் பலரும் “அந்த தாய்க்கு கடுமையான தண்டனை தர வேண்டும்” எனக் கோரியுள்ளனர். சமூக ஊடகத்தில் லைக்குகளுக்காக வாழ்க்கையையே சூதாடும் மனப்பான்மை தற்போது பெரும் எதிர்வினைகளை கிளப்பியுள்ளது. மேலும் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ரிலீஸ் மோகம் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் அதற்காக உயிரையே இழக்கும் நிலைக்கு சிலர் சென்று விடுகிறார்கள். அப்படித்தான் ஒரு தாய் தன்னுடைய மகளை வைத்து வீடியோ எடுத்த நிலையில் தற்போது அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் ஏற்கனவே நடந்ததாகவும் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதாகவும் கூறப்படுகிறது.