அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் முன்னிட்டு ஹரியானா மாநிலம் பிவானியல் ராம்லீலா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஹரிஷ் மேத்தா என்ற கலைஞர் அனுமான் வேடம் அணிந்து நடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

இதனை நாடகத்தின் ஒரு பகுதியாக பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் வெகு நேரம் ஆகியும் அவர் எழுந்திருக்காது நிலையில் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் ஹரிஷ் மேத்தா ஏற்கனவே மாரடைப்பில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.