தமிழகத்தில் கடந்த வருடம் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை அறிவிப்பில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலிலிருந்து காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு இந்த ஆண்டில் 200 பேர் ஆன்மீக பயணம் அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் அதற்கான செலவினத்தொகை 50 லட்சத்தை அரசு ஏற்றுக்கொள்ளும் என அறிவித்தது. அதன்படி 200 பேர் அரசு நிதி சார்பாக காசிக்கு ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த ஆன்மீக பயணத்திற்கு அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில் மண்டலத்திற்கு 15 பேர் வீதம் 300 பேரை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் இந்து மதத்தை சேர்ந்தவராகவும் இறை நம்பிக்கை உடையவராகவும் 60 முதல் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் பெற்றுக்கொண்ட நவம்பர் 20ஆம் தேதிக்குள் அதனை சமர்ப்பிக்க வேண்டும். மண்டல இணை ஆணையர் பரிந்துரைக்கும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மீக பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.