அயோத்தியில் இன்று ராமர் கோவில் திறப்பு விழாவானது நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் கர்நாடகாவின் ஷிமோகாவில் ஷிவப்பா நாயகா சர்க்கிள் பகுதியில் ராமர் பக்தர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டியில் குழந்தையுடன் வந்த இஸ்லாமிய பெண் அதனை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். அவரை போலீசார் அங்கிருந்து கிளப்ப முயன்றனர்.

அப்போது அங்கு வந்த ராம பக்தர்கள் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டனர். அப்பெண் திடீரென அல்லாஹ்ஹூ அக்பர் என பதில் முழக்கம் எழுப்ப அந்த இடமே ஒரு நிமிடம் அப்படியே ஆடிப் போனது. பின்னர் அப்பெண் குழந்தையுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.