ராமர் குறித்து கேரளாவை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. திருச்சூர் சட்டசபை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ பாலச்சந்திரன் தன்னுடைய முகநூல் பக்கத்தில், கடவுள் ராமர் மற்றும் லட்சுமணனுக்கு சீதை பரோட்டா மற்றும் இறைச்சியை உணவாக பரிமாறியதாக ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது என பதிவிட்டதே சர்ச்சைக்கு காரணம். தனது பதிவை சிறிது நேரத்தில் நீக்கிய அவர், பழைய கதை ஒன்றை முகநூலில் பதிவிட்டிருந்தேன், யாரையும் புண்படுத்தும் நோக்கில் அது பதிவிடப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.