இந்தியாவில் பண்டிகை காலம் அடுத்தடுத்த வருவதால் மக்கள் பலரும் ரயிலில் செல்ல திட்டமிட்டு உள்ளனர். ரயில்களில் சொந்த ஊர்களுக்கும் வீடுகளுக்கும் மக்கள் செல்லும் நிலையில் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இதனை தடுக்க ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி நவம்பர் 13 முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கிடைக்காது எனவும் இந்த தடை குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையங்களுக்கு செல்லும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் பிளாட்பாரத்தில் அதிக பேர் இருக்கக் கூடாது என்பதற்காக கூட்டத்தை கட்டுப்படுத்த இந்திய ரயில்வே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.