இந்திய ரயில்வே நிர்வாகம் இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் UPI டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்வதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் பயணிப்பதற்கான டிக்கெட்டை இனி பணம் கொடுத்து எடுக்க வேண்டிய தேவை இல்லை. டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்து எடுத்துக் கொள்ள முடியும். இந்த வசதியானது நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் தற்போது அமலுக்கு வந்துள்ளது.