ரயில்வே பாதுகாப்பு படையில் 20 ஆயிரம் கான்ஸ்டபிள் பணியிடங்களை  நிரப்புவதற்கான அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளதாக வெளியான செய்தியை ரயில்வே அமைச்சகம் மறுத்துள்ளது. அண்மையில் ரயில்வே பாதுகாப்பு படையில் 20 ஆயிரம் கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக ஒரு செய்தி இணையத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த செய்தி முற்றிலும் தவறானது என ரயில்வே அமைச்சகம் மறுத்துள்ளது.

இது தொடர்பான பொய் பிரசாரத்தை நம்ப வேண்டாம். அப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டால் அது அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு செய்தி குறிப்பை வெளியிடும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மேலும் பணம் கொடுத்து வேலை வாங்கி விடலாம் என்ற முயற்சியில் தரவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்வாக்கு மூலமாகவோ நியாயமற்ற வழிகளை பயன்படுத்தியோ ரயில்வேயில் வேலை என்ற பொய்யான வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.