மதுரையில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ரயிலில் பயணிகள் சிலிண்டரை வைத்து சமைத்தது விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. ரயிலில் ஆபத்தான பொருட்களை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றம் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில்வே துறைக்கு தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்ல மாட்டோம் என்று அளித்த உறுதி மொழியை சுற்றுலாப் பயணிகள் மீறி உள்ளனர். மூன்று சமையல் சிலிண்டர்கள் வைத்திருந்ததால் மள மள என தீ பரவியுள்ளது என தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.