மாம்பழம் ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்டுள்ளதா? என்பதை மக்கள் எளிதாக கண்டறியலாம். ஒரு பக்கெட் நிறைய நீர் எடுத்து அதில் மாம்பழத்தை போட்டால் இயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் மூழ்கி கிடக்கும். ரசாயனம் மூலம் பழுக்க வைத்த பழங்கள் மிதக்கும். இயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்கள் வெளிர் நிறத்தில் இருந்தாலும் அதிக வாசனை கொண்டதாக இருக்கும். ஆனால், ரசாயனம் மூலம் பழுக்க வைத்தவற்றில் வாசனையே இருக்காது.