இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும் செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த இரண்டு கல்லூரிகளிலும் 160 பி என் ஒய் எஸ் இடங்கள் உள்ளன. 17 தனியார் கல்லூரிகளில் 1550 இடங்கள் உள்ளது. மொத்தம் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இந்த படிப்புக்கு நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் கலந்தாய்வின் முடிவில் 325 இடங்கள் காலியாக இருந்தது.

அதேசமயம் கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு பெற்ற சிலர் கல்லூரிகளில் சேராததால் தற்போது மாநில முழுவதும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளில் 413 இடங்கள் காலியாக உள்ளது. இதற்கான நேரடி கலந்தாய்வு இன்று  பிப்ரவரி 14-ஆம் தேதி அருகம்பாக்கம் அறிஞர் அண்ணா இந்திய மருத்துவத்துறை வளாகத்தில் நடைபெற உள்ளதால் இதுவரை இந்த படிப்புக்கு விண்ணப்பிக்காதவர்கள் 14ஆம் தேதி காலை 11 மணிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பித்து கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.