காட்பாடி வழியாக சென்னை செல்லும் ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக இன்று  பிப்ரவரி 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பகுதி ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6.15 மணிக்கு செல்லும் அதிவிரைவு ரயிலும்,மறு மார்க்கமாக சென்னையில் இருந்து கோவைக்கு பகல் 2.30 மணிக்கு செல்லும் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மைசூரில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 5 மணிக்கு செல்லும் அதிவிரைவு ரயில் மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் மாலை 3.30 மணிக்கு பெங்களூர் செல்லும் அதிவிரைவு ரயில் ஆகியவை பிப்ரவரி 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுவதற்கு பதில் காட்பாடியில் இருந்து புறப்படும் எனவும் தெரிவித்துள்ளது.