பாஜக மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, கூட்டணி பிரச்னையில் எனது நிலைப்பாட்டை பாஜக மேலிடத்தில் ஆழமாக சொல்லிவிட்டேன். இறுதி முடிவை இனி தேசிய தலைமை தான் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும்; அது அவர்களின் விருப்பம் என மறைமுகமாக அதிமுகவை விமர்சித்த அண்ணாமலை, 39 தொகுதிகளுக்கும் பாஜக நாடாளுமன்றக் குழு அமைக்கப்படவுள்ளதாக அறிவித்தார்.

மேலும் இந்த கட்சி இருந்தால்தான் ஜெயிப்போம் இந்த கட்சி இல்லை என்றால் ஜெயிக்க மாட்டோம் என யாரும் கூற முடியாது, யார் இல்லாவிட்டாலும் நாங்கள் ஜெயிப்போம் என அதிமுக பிரிந்து சென்றது குறித்து அண்ணாமலை கருத்து தெரிவித்தார். நான் ஒருத்தர் இருக்கிறார் என்று சந்தேகப்பட்டதும் இல்லை போகிறார் என்று வருத்தப்பட்டதும் இல்லை, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியாளர்கள் வாக்கு சதவீதம் உயர்வதை பார்ப்பீர்கள் என்று அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.