குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டின் கீழ், ஒரு விமானி தனது விமானத்தில் பயணிகள் அமர்ந்திருந்த போதே அதிரடியாகக் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சர்வதேசக் குழந்தைகள் பாலியல் கடத்தல் கும்பலை இயக்கி வந்ததாகக் கூறப்படும் அந்த விமானி, விமானம் புறப்படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னதாகப் பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டார்.

இந்நிலையில் பயணிகள் அனைவரும் ஆச்சரியத்திலும் பயத்திலும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, சீருடையில் இருந்த அவர் விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தத் தருணங்கள் அங்கிருந்தவர்களால் படம்பிடிக்கப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

“>

மேலும் விசாரணையில், அந்த விமானி பல ஆண்டுகளாக மிகவும் ரகசியமான முறையில் குழந்தைகளைத் துன்புறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வந்ததும், இணையம் வாயிலாகத் தனது வலையமைப்பை விரிவுபடுத்தி இருந்ததும் தெரியவந்துள்ளது. ஒரு பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு இத்தகைய கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டது சமூக ஆர்வலர்கள் மற்றும் சக ஊழியர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்துள்ளதுடன், சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. குழந்தைப் பாதுகாப்பை உறுதி செய்ய இத்தகைய குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.