ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதிக்கு பேருந்து ஒன்று பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அதே சமயத்தில் மற்றொரு பேருந்தும் நொய்டா நோக்கி வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் தோல்ப்பூரில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்து மதுரா அருகே வந்தபோது மற்றொரு பேருந்தின் மீது மோதியது. இரண்டு பேருந்துகளும் மோதிக்கொண்ட இந்த விபத்தில் 40 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

அவர்களை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்ததோடு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.