உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாஃபர் நகரில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது 17 வயது மூத்த மகள் கல்லூரியிலும், இளைய மகள் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் அக்காள் தங்க இருவரும் செல்போன் வாங்கி தருமாறு பெற்றோரிடம் கேட்டு வந்தனர். கடந்த 17ஆம் தேதி இருவரும் தனது தாயிடம் மொபைல் போன் கேட்டு அடம் பிடித்தனர். ஆனால் அவர்கள் வறுமையை காரணம் காட்டி தந்தையால் பள்ளி செலவை மட்டுமே கவனிக்க முடியும்.

மொபைல் போன் வாங்கி கொடுக்க முடியாது என திட்டவட்டமாக கூறினார். இதனால் மன உளைச்சலில் இருந்த சகோதரிகள் தங்களது அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். மறுநாள் காலை தனது மகள்கள் இறந்து கிடப்பதை பார்த்து தாய் கதறி அழுதார். ஆனால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் சிறுமிகளின் உடலை தகனம் செய்து விட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.