
மும்பையின் கோரேகான் பகுதியில் உள்ள ஆரே காலனியில், 14 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோர் மொபைல் போன் தர மறுத்ததற்காக தற்கொலை செய்துக்கொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த சில நாட்களாக சிறுமி மொபைலில் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சம்பவம் நடந்த அன்று பெற்றோர் மொபைல் போன் கொடுக்க மறுத்ததால் கோபத்தில் சிறுமி அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டார்.
நீண்ட நேரமாகியும் சிறுமி அறையை விட்டு வெளியே வராததால் பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மொபைல் போன் விளையாட தராததால் மன உளைச்சலில் சிறுமை தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.