இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் ஆவார். இவர் தற்போது தென்னிந்திய படங்களுக்கு அதிகம் இசையமைத்து வருகிறார். அத்துடன் ஐஸ்வர்யா ரஜினியின் லால் சலாம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.  இந்நிலையில் சென்னையில் விருது வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் AR ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவுடன் கலந்துகொண்டார்.

விழா மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் ARR பேசி கொண்டிருந்தபோது, அவரது மனைவியை மேடைக்கு பேச வரும்படி அழைத்தனர். இதனைதொடர்ந்து, மேடைக்கு வந்த அவர் இந்தியில் பேசினார். அப்போது அவரை இடைமறித்த ARR தமிழில் பேசும்படி செல்லக்கட்டளை இட்டார். அவர் இப்படி கூறியதும் கூட்டத்தில் பலத்த கோஷம் எழுந்தது.