மேகதாதுவில் நிச்சயம் புதிய அணை கட்டுவோம் என மஜத தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். சட்ட ரீதியாக அனைவரையும் சமாதானம் செய்து அணை கட்டுவதற்கான முயற்சியில் விரைவில் ஈடுபடுவோம். மேகதாது கர்நாடாகாவின் தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்யும். தமிழர்களும் இந்த அணை மூலம் அதிக அளவில் பலன் பெறுவார்கள் என்று கூறியுள்ளார். குமாராசாமி மாண்டியா தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக தேர்தலில் போட்டியிடுகிறார்.