காவலர் நினைவு தின அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 21ஆம் தேதி ஆண்டுதோறும் காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை மெரினா கடற்கரை எதிரே உள்ள தமிழக காவல்துறையின் தலைமை அலுவலகத்தில் வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி காலை 8 மணிக்கு காவலர் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுவதால் அந்த இரண்டு நாட்கள் மற்றும் அக்டோபர் 21 ஆகிய மூன்று நாட்களுக்கு மெரினா கடற்கரையின் காமராஜர் சாலை பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் காலை 8 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.