மும்பை ஆசாத் மைதானத்தில் வாலிபர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது 31 வயதுடைய விக்ரம் அசோக் தேஷ்முக் என்பவரும் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இவர் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்துள்ளார். இந்த நிலையில் போட்டியின் பத்தாவது ஓவரில் விக்ரம் அசோக் சக வீரர்களிடம் தனக்கு நெஞ்சுவலிப்பதாக கூறியுள்ளார். அதன் பிறகு மருத்துவமனைக்கு செல்லாமல் அலட்சியமாக விளையாடி உள்ளார்.

17-வது ஓவரில் பேட்டிங் செய்யும்போது மைதானத்திலேயே அசோக் சுரண்டு விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அசோக்கை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அசோக் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அசோக்கிற்கு மனைவியும் ஒரு வயதில் மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.