மைதானத்தில் முதல் 15 நிமிடங்கள் அதிக பதற்றத்துடன் இருந்ததாக தேவ்தத் படிக்கல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமான அவர் பேசுகையில், இங்கிலாந்து அணி பவுலிங்கை  எதிர்கொள்ள சவாலாக இருந்தது. ஆனாலும் பதட்டத்தை கட்டுப்படுத்தி விளையாடினேன். சர்பராஸ் கானுடன் பார்ட்னர்ஷிப் அமைப்பதில் உறுதியாக இருந்தேன். அது நிறைவேறியதில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார். மேலும் நேற்றைய ஆட்டத்தில் இவர் 65 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.