மும்பை இந்தியன்ஸ் அணியின் இளைய அதிரடி பேட்ஸ்மேன் திலக் வர்மாவை “ரிடையர்ட் அவுட்” செய்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவுக்குப் பிறகு, சூர்யகுமார் யாதவ் குழப்பமும், பின்னர் வருத்தமும் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேடைக்கு வெளியே மைக்கில் கோச் மஹேல ஜெயவர்தன திலக்கை வெளியேற்றும் முடிவை அறிவிக்கும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. 23 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்த திலக் வர்மா, அதிரடியாக பந்துகளை பவுண்டரிக்கு அடிக்க முடியாமல் சிரமப்பட்டதால், இரண்டாவது கடைசி ஓவரில் அவரை வெளியேற்றி மிட்செல் சாண்ட்னரை களமிறக்கினர்.

 

போட்டிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் மஹேல ஜெயவர்தன இந்த முடிவு குறித்து விளக்கமளித்தார். “அவர் தொடங்கி ஓட முயற்சித்தார், ஆனால் முடியவில்லை. நாங்கள் கடைசி ஓவர்வரை காத்திருந்தோம், ஏனெனில் அவர் சில நேரம் களத்தில் இருந்ததால் ரன்கள் கிடைக்கும் என நம்பினோம். ஆனால் இறுதியில் ஒரு புதிய வீரர் தேவை என உணர்ந்தேன். அதனால் இந்த முடிவை எடுக்க வேண்டியது எனக்கு கடினமாக இருந்தாலும், அணிக்காக அதைப் செய்தேன். இது கிரிக்கெட்டில் நடக்கும் சாதாரண விஷயமே,” என ESPN Cricinfo-வுக்கு அவர் கூறினார்.

மேலும் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக மும்பை அணியின் வீரர் ஒருவர் ரிட்டயர்டு அவிட்ட முறையில் போட்டியில் இருந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு ஹர்திக் பாண்டியா மீது விமர்சனங்கள் குவிந்து வருவதால் அவரும் விளக்கம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.