சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வருகிற 23-ம் தேதி வரை பல இடங்களில் மழை பெய்யக்கூடும். இந்நிலையில் ஒரு நாள் மழைக்கே சாலையில் தண்ணீர் தேங்கி இருக்கிறது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது ” மழையில் வாகனங்கள் நீரில் மூழ்கியது, தலைநகரம் அஸ்தமித்துள்ளது. இரண்டு ஆண்டு திராவிட ஆட்சியில் வடிகால் வாரியத்தின் செயல்பாடு இதுதானா? விடியல் ஆட்சி என பெருமை பேசும் முதல்வர் ஸ்டாலின் இதற்கு பதில் சொல்வாரா? என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.