தென் மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக அங்கு பெருமளவு வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். மக்களை மீட்கும் பணிகள் கடந்த 3 நாட்களாக துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீட்புப் பணிகள் குறித்து முதல்வர் விசாரிப்பது எங்களுக்கு டானிக் போல் உற்சாகமாக உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நிவாரண பணியில் நான் உள்ளிட்ட பலரும் வேலை செய்து வருகிறோம். சேதமடைந்துள்ள பாலங்கள், சாலைகள் உடனடியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. மீட்புப் பணி பற்றி முதல்வர் இரவு பகல் பாராமல் விசாரித்து வருகிறார். சிறப்பாக பணியில் ஈடுபட இது உத்வேகம் அளிப்பதாக தெரிவித்தார்