
பாகிஸ்தானின் நிதி நிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) ரூ.800 மில்லியன் (அமெரிக்க டாலர்) மதிப்பிலான நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது “Improved Resource Mobilization and Utilization Reform Program – Subprogram 2” என்ற பெயரில் அறிவிக்கப்பட்டு, நாட்டின் நிதி நிர்வாகத்தை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், 300 மில்லியன் டாலர் கொள்கை சார்ந்த கடனாகவும், 500 மில்லியன் டாலர் அளவிலான காப்பீட்டு திட்டமாகவும் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த காப்பீடு மூலம் தனியார் வங்கிகளில் இருந்து கூடுதல் 1 பில்லியன் டாலர் வரை நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது வரி விதிப்பு, செலவுத் திட்ட மேலாண்மை, காசோலை கட்டுப்பாடு, மற்றும் தனியார் முதலீட்டாளர்களுக்கு வசதியாகும் வகையில் புதிய நடைமுறைகளை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ADB தரப்பில், “பாகிஸ்தான் தற்போது பொருளாதார சீர்திருத்தங்களில் நல்ல முன்னேற்றம் காட்டுகிறது. இந்த திட்டம், அதன் அரசின் புது கொள்கைகள் மற்றும் நிறுவன மாற்றங்களை வலுப்படுத்தும்” என தெரிவித்தனர். கடந்த 1966ஆம் ஆண்டு முதல் ADB பாகிஸ்தானுக்கு 52 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதி உதவிகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு ரூ.8670 கோடி கடனுதவி வழங்கிய நிலையில் தற்போது ஆசிய வளர்ச்சி வங்கியும் பாகிஸ்தானுக்கு கடன் வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இவ்வாறு பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் பணம் பயங்கரவாதத்திற்கு உதவலாம் என்பதால் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் வழங்கும் உதவி தொகையை வழங்கக்கூடாது என இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் தற்போது ஆசிய வளர்ச்சி வங்கியும் பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவது தற்போது உலக அளவில் இந்தியாவுக்கு சற்று சரிவாக பார்க்கப்படுகிறது.