
சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் வியப்பில் ஆழ்த்தும். அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு கொடிய பாம்பின் பிடியிலிருந்து வாத்து முட்டைகளை வியத்தகு முறையில் மீட்டெடுப்பதை காண முடிகிறது. இது பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது மட்டுமல்லாமல் அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளது. வாத்து முட்டைகள் அனைத்தையும் முழுவதுமாக பாம்பு விழுங்குவதற்கு தயாராக இருக்கிறது.
அருகில் இரண்டு வாத்துக்கள் தங்களுடைய கூடுக்கு அருகில் உதவியற்ற நிலையில் இருக்கின்றன. பாம்பு தங்கள் இனத்தின் முட்டைகளை சுற்றி வளைத்திருப்பதை காணும்போது வாத்துக்கள் பதற்றம் ஆகிறது. அந்த வாத்துகள் உதவிக்காக மௌனமாக கெஞ்சுவது போல தோன்றுவதால் அவற்றின் துயரமும் அந்த வீடியோவில் தெரிகிறது. அப்போது ஒரு மனிதர் அந்த வாத்து முட்டைகளை எடுத்து வாத்துகளுக்கு உதவி செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க