சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி பார்ப்பவர் எவரையும் நிலைகுலையச் செய்கிறது. ஐயப்ப பக்தர்கள் குழுமி இருக்கும் ஒரு இடத்தில், கொதிக்கும் எண்ணெயில் சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு பச்சிளம் குழந்தையின் காலை முக்கி எடுக்கின்றனர். பக்தி என்ற பெயரில் செய்யப்படும் இந்தச் செயலால், அந்தக் குழந்தை வலியால் துடிதுடித்து அலறும் சத்தம் காண்பவர் இதயத்தை நோகடிக்கிறது. மதம் மற்றும் நம்பிக்கையின் பெயரால் ஒரு பச்சிளம் குழந்தைக்கு இழைக்கப்படும் இந்த அநீதி சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Arrest the parents of this child ASAP.
Poor thing doesn’t deserve to grow up with parents who believe in this sort of shit. 💔
pic.twitter.com/MxehIkR1MU— Roshan Rai (@RoshanKrRaii) December 28, 2025
இந்தக் கொடூரமான காணொளியைப் பார்த்த நெட்டிசன்கள், அந்தப் பெற்றோர் மற்றும் அங்கிருந்தவர்கள் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். “இந்தக் குழந்தைக்கு இப்படிப்பட்ட பெற்றோர்களிடம் வளர்வதற்கு எந்தத் தகுதியும் இல்லை” என்றும், “உடனடியாக அந்தப் பெற்றோரைக் கைது செய்ய வேண்டும்” என்றும் பலரும் தங்களது ஆதங்கத்தைப் பதிவிட்டு வருகின்றனர். மூடநம்பிக்கையின் பிடியில் சிக்கி ஒரு பிஞ்சு குழந்தையின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய செயல்கள், நாகரீக சமூகத்தில் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
