2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்று பாஜகவினர் கூறுகின்றனர் என்ற கேள்வியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய போது, அவர்களுடன் கூட்டணி வைத்ததால் தான் எங்கள் ஆட்சியே பறிபோனது என்று கூறியுள்ளார்.

நானேல்லாம் ராயபுரத்தில் தோற்கிற ஆளா? வெளிப்படையாக சொல்கிறேன் 25 ஆண்டுகளாக ராயபுரத்தில் முடி சூடா மன்னனாக இருந்தேன். தோல்வியே காணாத ஆள் நான். பாஜகவால் தோற்றே என்று கூறியுள்ளார். மேலும் பாஜக இல்லை என்றால் நான் சட்டமன்றத்தில் இருந்து இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.