தர்மபுரி நான்குரோடு பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் உழவர் சந்தை அமைந்துள்ளது. இங்கு தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் அத்தியாவசிய காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பூண்டு வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ பூண்டு ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை நிலவரப்படி ஒரு கிலோ பூண்டு ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.