மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்து 9 வருடங்கள் நிறைவு அடைந்திருக்கிறது. அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கென தற்போதே கட்சிகள் தயாராகி வரும் சூழலில், மோடியே மீண்டும் பிரதமராக்க 49% மக்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் யார் பிரதமராக வர வேண்டும் என ஏபிபி செய்தி நிறுவனம் மற்றும் சி வோட்டர் இணைந்து நாடு முழுவதும் கருத்து கணிப்பு நடத்தியது. அதில், 49% பேர் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். 18% பேர் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.