
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் விபத்தில் 41 ஊழியர்கள் சுரங்கத்திற்குள் சிக்கினார். சுமார் 17 நாள் தீவிர போராட்டத்திற்கு பிறகு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்களை சந்தித்து பேசிய அம்மாநில முதல்வர் அனைவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.