தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மற்றும் தூத்துக்குடியில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 18ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய காலக்கெடு வழங்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரி 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது இது பிப்ரவரி 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். வீடு, வணிக பயன்பாடு மற்றும் தொழிற்சாலைகளுக்கும் இந்த கால அவகாசம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.