தமிழகத்தில் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கும் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும். ஆதார் எண்ணை இணைப்பதற்கும் மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி சேர்க்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் மின் இணைப்புடன் ஆதார இணைத்துக் கொள்ளலாம்.

தமிழக அரசும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில் ஜனவரி 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசி அமைச்சர் செந்தில் பாலாஜி,அதிமுக ஆட்சியில் நலிவடைந்த மின்வாரியத்தை மேம்படுத்தவே மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்படுகின்றது என்று கூறியுள்ளார். 2.67 கோடி மின் இணைப்புகளில் இதுவரை இரண்டு கோடிக்கும் ஏற்பட்ட மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார இணைத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.