உத்திரபிரதேசம் மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த அபிஷேக் அலுவாலி(25) என்ற நபருக்கு கடந்த நவம்பர் மாதம் அஞ்சலி என்பவரூடன் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் நேற்று டெல்லி உயிரியல் பூங்காவை சுற்றி பார்க்க தம்பதியினர் சென்றிருந்த நிலையில் அபிஷேக் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவருடைய சடலத்தை உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.

அப்போது கணவனின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத அஞ்சலி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி மூன்று மாதங்களில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.