தமிழகத்தில் உள்ள மொத்தம் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வருகின்ற ஜூலை நான்காம் தேதி அதாவது நாளை மறுநாள் முதல் ஜூலை ஏழாம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்புகளில் 1,07,299 இடங்கள் காலியாக உள்ளன.

அதில் 84 ஆயிரத்து 899 மாணவர்கள் ஜூன் 30-ம் தேதி வரை சேர்ந்துள்ள நிலையில் வருகின்ற ஜூலை நான்காம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.