சென்னையில் புயல் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார்.

மிக்ஜாம் புயல் தந்த பெருமழையால் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதனை ஆய்வு செய்ய
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார். மத்திய இணை அமைச்சர் எல் முருகனுடன் இணைந்து ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆய்வு செய்யும் போது தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு உடன் நிற்பார் என அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பின் ராஜ்நாத் சிங் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு நிவாரண உதவி கோரியுள்ள நிலையில் பாதிப்புகளை நேரடியாக ஆய்வு செய்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.