
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரையில் சக்கரமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு வழக்கறிஞர். இந்நிலையில் இவர் தலையில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது கொலையா? அல்லது விபத்தா? என்று காவல்துறையினர் தீவிர விசாரணையில் உள்ளனர். மேலும் இவர் ஒருங்கிணைத்த வேலூர் மாவட்ட பாமக இளைஞரணி தலைவராக செயல்பட்டு வந்தார் என்பது தெரிய வந்துள்ளது.