சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் ஐக்கியப்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. இதனால் சரத்குமாருக்கு பாஜகவில் ஒரு முக்கிய பதவி கிடைக்கும் என தெரிகிறது. சமீபத்தில் நெல்லையில் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய சரத்குமார், எனது மாமியார் கீழே விழுந்து மருத்துவமனையில் இருந்தார்.

அவரை பார்க்க சென்றபோது ஐயா நான் உங்களை எப்போது முதலமைச்சராகப் பார்க்கப்போகிறேன் என முதல் கேள்வி கேட்கிறார் என கூறியிருந்தார். இந்நிலையில் பாஜகவில் தனது கட்சியை இணைத்ததன் மூலம் தனது மாமியாரின் ஆசையை உடைத்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.