மரங்கள் இல்லாத உலகத்தை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது, ஏனென்றால் அவை இல்லாமல் ஒரு உலகமே இருக்காது. மரங்கள் பூமியில் மிகவும் அத்தியாவசியமான உயிரினங்களில் ஒன்றாகும் . உயிரினங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தம் செய்ய அவை தொடர்ந்து வேலை செய்கின்றன. அதுமட்டுமின்றி, பல சலுகைகளை வழங்குவதன் மூலம் உலகை வாழ சிறந்த இடமாக மாற்றுகிறார்கள்.

ஆனால்  உலகில் மரங்கள் எதுவுமே  இல்லாத நாடுகளின் பட்டியலில் இரண்டு  நாடுகள் உள்ளது. அதில் முதலில் கிரீன்லாந் நாட்டி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனி முகடுகள் மட்டுமே காணப்படும். இந்த நாட்டில் பசுமையான இடத்தை பார்ப்பது மிகவும் கடினம். பெயரில் பசுமையை வைத்திருக்கும் இந்நாட்டில் ஒரு மரத்தை கூட பார்க்க முடியாது. மற்றொரு நாடு கத்தார். இந்த நாடு முன்பு பாலைவனமாக இருந்தது. தற்போது உயரமான கட்டிடங்கள் தான் நிறைந்துள்ளது. மேலும் மணல்களால் சூழப்பட்டுள்ளது. இதனால் இங்கே ஒரு மரம் கூட இல்லை. எனவே அந்நாட்டு மக்கள் அங்கு மரம் வளர்க்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.