நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு விட்டதால் மேல் நடவடிக்கை வேண்டாம் என த்ரிஷா பதில் அளித்துள்ளார்.

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையாக பேசியது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்துவிட்டு தொடர்ந்து நடவடிக்கைகளை காவல்துறை ஒருபுறம் செய்திருந்தாலும், வழக்கு பதிவு செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறை நடிகை திரிஷாவுக்கு கடிதம் மூலமாக அதற்கான விளக்கத்தை கேட்டு அனுப்பி இருந்தது.

அந்த கடிதத்திற்கு நடிகை த்ரிஷா, நடிகர் மன்சூர் அலிகான் பேசுவதை உணர்ந்து மன்னிப்பு கேட்டதால் மேல் நடவடிக்கை தேவையில்லை என பதில்மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. த்ரிஷா குறித்து பேசிய விவகாரத்தில் காவல்துறையினர் மன்சூர் அலிகான் மீது இரு பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அதாவது, நேரடியாக நடிகை திரிஷா புகார் அளிக்கவில்லை. தேசிய மகளிர் ஆணையம் கடிதம் அனுப்ப, அதன்மீது  மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் தான் நடவடிக்கை எடுப்பது குறித்து திரிஷாவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவரும் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். அடுத்த கட்டமாக அனைத்து மகளிர் காவல் துறையினர் சட்ட ரீதியான ஆலோசனைசெய்யப்பட்ட பின், அதன் மீது அடுத்த கட்ட நகர்வு இருக்கும்.