பீகாரில் மாமியார் மீது காதல் கொண்ட மருமகனுக்கு நபர் ஒருவர் தன்னுடைய மனைவியை திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் நடந்துள்ளது. பீகாரில் உள்ள பாங்கா நகரை சேர்ந்த சிக்கந்தர் யாதவ் என்பவருடைய மனைவி சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனது மனைவியின் பெற்றோர் அதாவது தனது மாமனார் மாமியார் வீட்டில் தங்கியுள்ளார். மாமனார் திலேஷ்வருக்கு 55 வயதும், மாமியார் கீதா தேவிக்கு 45 வயதாகும் நிலையில் சிக்கந்தர்க்கு தனது மாமியார் மீது காதல் ஏற்பட்டுள்ளது.

இவர்களுடைய நெருக்கம் மாமனாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் இறுதியில் கையும் களவுமாக சிக்கியுள்ளனர். ஊர் பஞ்சாயத்திற்கு அழைத்துவரப்பட்ட விசாரணை செய்த போது இவர்களின் காதல் விவகாரம் தெரிய வந்தது. பிறகு மாமனாரின் சம்மதத்துடன் இருவருக்கும் அவருடைய முன்னிலையில் திருமணம் செய்து வைக்கப்பட்டதுடன் சட்டப்படியும் நீதிமன்றத்தில் திருமணம் நடந்துள்ளது. மனைவியை மருமகனுக்கு திருமணம் செய்து வைத்ததோடு அவரை இரண்டாவது கணவர் வீட்டிற்கு அனுப்பியும் வைத்துள்ளார். இவர்களுடைய காதல் கதை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு குறித்த மாமனாரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.