உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில், மருமகனை  கடத்தி கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிங்காவலி அஹிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டௌலா கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், ரோஹித் என்ற இளைஞர் தனது மனைவியின் அடையாளம் தெரியாத நண்பரை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்ததற்காக, அவரது சொந்த மாமியார் உட்பட ஏழு பேர் சேர்ந்து அவரை பயங்கரமாக தாக்கினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த காட்சிகளில், வெறும் 20–25 வினாடிகளில் ரோஹித் மீது 35-க்கும் மேற்பட்ட குத்துகள் விழுந்ததாக கூறப்படுகிறது. அதாவது அவர்கள் கூட்டமாக சேர்ந்து கைகளால் அந்த வாலிபரை கொடூரமாக அடித்தனர். அதிலும் ஒருவன் அவரது முகத்தை மீண்டும் மீண்டும் குத்த, மற்றொருவர் தரையில் இருந்த கல்லால்  அவரை அடித்தார். அவர் தாக்கிய பிறகும் திருப்தியடையாத தாக்குதலாளிகள், ரோஹித்தை சுவரில் மோதித்தள்ளியும், பின்னர் அவரது கால்களைப் பிடித்து தரையில் வீசியும் கொடூரமாக நடந்துகொண்டனர்.

இது குறித்து ரோஹித் கூறுகையில், “என் மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருக்கிறது. அவளை அடையாளம் தெரியாத ஒருவரை சந்திக்க வந்ததை நான் தடுக்க முயன்றதால் என்னை இப்படி தாக்கி விட்டனர்,” என்றார்.

தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக ரோஹித்தின் புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து அடையாளம் கண்டறியும் பணி முன்னெடுக்கப்படுகிறது. மேலும் இந்த தாக்குதல் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.