பெங்களூரில் உள்ள தனிச்சந்திரா பகுதியில் ஸ்ரீநாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியராக வேலை பார்த்து வந்த நிலையில் அவருக்கு மாதவ் ராவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாதவ்ராவ் நிதி நிறுவனத்தில் ஏல்ச்சீட்டு போட்டு அதன் மூலம் ரூ.5 லட்சம் பெற்றார்‌. ஆனால் பல மாதங்களாகியும் மாதவ்ராவ் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் மாதவாராவ் மனைவியுடன் ஸ்ரீ நாத் தகாத உறவில் இருந்த நிலையில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக மாதவ்ராவ வீட்டிற்கு ஸ்ரீநாத் சென்றுள்ளார். அதன் பின் அவர் மாயமான நிலையில் அவரை போலீசார் தேடி வந்தனர். தற்போது மாதவ் ராவ்  வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில் அவர் வீட்டில் ரத்தக்கரை இருப்பது தெரியவந்தது. அதன் பிறகு தலைமறைவாக இருந்த அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர் அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அதாவது அவருடைய மனைவியுடன் தகாத உறவில் ஸ்ரீநாத் இருந்ததால் கம்பியால் அடித்து அவரை கொலை செய்துள்ளார். பின்னர் உடலை 3 துண்டுகளாக வெட்டி சாக்கு பையில் கட்டி கால்வாயில் வீசியது தெரிய வந்தது. மேலும் அவரை கைது செய்த காவல்துறையினர் உடல் பாகங்களை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்