மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கு விடுமுறை வழங்க தனிச்சட்டம் உருவாக்குவது அவசியம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உ அறிவுறுத்தியுள்ளது. குழந்தையை வளர்ப்பதிலும் பாதுகாப்பதிலும் தாய் – தந்தை இருவருக்கும் முக்கிய பங்கு உள்ளது. எனவே, மனைவிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பாக இருக்க கணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என கடையம் காவல் ஆய்வாளர் சரவணன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.மேலும்  குழந்தையை வளர்ப்பதில் தாய், தந்தை இருவருக்கும் முக்கிய பங்கு உள்ளது என்று நீதிபதி விக்டோரியா கௌரி தெரிவித்தார்.