ஜெயிலர் படம் வெளியாவதற்கு முந்தைய நாள் ரஜினிகாந்த் ஆன்மீக பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். அக்டோபர் 2019 வருடம் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார்.  இமயமலை பயணத்தை முடித்துவிட்டு லக்னோ சென்ற ரஜினிகாந்த் அங்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உபி முதல்வர் யோகி காலில் ரஜினிகாந்த் விழுந்த சம்பவம் பூனை குட்டி வெளியே வந்து விட்டதை காட்டுகிறது என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். ரஜினிகாந்த் மீது எவ்வளவு பெரிய உயர்ந்த மரியாதையை தமிழக மக்கள் வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நபர் தலைவர்களை சந்திப்பது முதல்வரை சந்திப்பது பிரச்சினை அல்ல. ஆனால் காலடியில் விழுந்து வணங்குவது என்ன பொருள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.