தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பில் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல இடங்களில் வேலை வாய்ப்பு முகவுங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் வருகின்ற செப்டம்பர் 9ஆம் தேதி கன்னியாகுமரி நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பயனளிக்கும் விதமாக வேட்டூர்ணிமடம், எம் எஸ் ரோடு, முன்னோடி குமாரசாமி கல்லூரியில் தனியார் துறைகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் முதல் நிலை படிப்பு வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம் எனவும் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க அனைத்து அசல் ஆவணங்களுடனும் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும் வேலைவாய்ப்பு முகாம் குறித்த தகவல்களை அறிய https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/52308210011 என்ற இணையதள முகவரியை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.