தற்போது தினந்தோறும் இயக்கப்படும் மூன்று ரயில்களை ஒன்றிணைத்தே வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் மதுரை விரைவு ரயில் என்ற பெயரில் மதுரை மற்றும் குருவாயூர் இடையே ஒரே அறையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தற்போது குருவாயூர் மற்றும் புனலூர் விரைவு ரயில், மதுரை மற்றும் செங்கோட்டை விரைவு ரயில், செங்கோட்டை மற்றும் கொல்லம் விரைவு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில்களை ஒன்றிணைத்து மதுரை மற்றும் குருவாயூர் இடையே மதுரை விரைவு ரயில் என்ற பெயரில் ஒரே ரயிலாக ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் இந்த ரயில் மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளக்குடி, விருதுநகர்,  சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் வழியாக குருவாயூர் சென்றடையும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.