இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. மோசடி பேர்வழிகள் எப்படியாவது நம்மிடமிருந்து பணத்தை பிடுங்குவதற்காக பல்வேறு திட்டம் தீட்டி வருகிறார்கள். அந்தவகையில் சமீபகாலமாக மின்சார நுகர்வோரை குறிவைத்து மோசடிகள் நடைபெறுகின்றன. நீங்கள் கட்டணத்தை செலுத்தவில்லை, இன்று இரவுக்குள் உங்கள் இணைப்பு துண்டிக்கப்படும், உடனடியாக இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளவும் என்று சைபர் குற்றவாளிகள் குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள்.

மேலும், சில செயலிகளை பதிவிறக்கம் செய்யவும் அறிவுறுத்துகின்றனர். அப்படி செய்யும் நபர்களின் வங்கி மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை திருடுகின்றனர். இத்தகைய மோசடி கும்பலிடம் இருந்து மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். இதை உடனடியாக உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.